Tuesday, September 11, 2007

சேலம் ரயில்வே கோட்டம்...மீண்டும் அரங்கேற பார்க்கும் துரோகம்...






தமிழ்நாட்டு உரிமைக்காக தன் உயிரைத் துறக்கத் துணியும்
சட்டக் கல்லூரி மாணவர் - பெரியார் தி.க. செயல்வீரர் பன்னீர்செல்வம்.


சேலம் ரயில்வே கோட்டம், தமிழகத்தின் மேற்கு மாவட்டங்களின் 50 ஆண்டுகால கோரிக்கை இது. தமிழகத்தில் இயங்கிய போத்தனூர் ரயில்வே கோட்டம், தமிழர்கள் குறட்டை விட்டு தூங்கியதால், நம் கண் முன்னே பாலக்காடு ரயில்வே கோட்டமாகி நிற்கும் கொடுமையை என்ன வென்று சொல்வது.

இந்திய அரசு தமிழர்களின் தயவில் இருப்பதால் பல நன்மைகள் கிடைத்து வருகின்றது. அவைகளில் ஒன்று தான் சேலம் கோட்டம் அமைத்தது. நீண்ட நெடிய போராட்டத்திற்குபின் அதுவும் குறிப்பாக பெரியார் திராவிடர் கழகப் பொதுச்செயலாளர் தோழர் கோவை.இராமகிருட்டிணன் அவர்கள் கடந்த 9 ஆண்டுகளாக மக்களை அரசியல் இயக்கங்களை, திரட்டும் பணியில் ஈடுபட்டு அதில் இன்று முழு வெற்றியும் கண்டுள்ளார். சேலம் கோட்டம் அமைவதை எதிர்த்த மலையாளிகள் அதிலும் குறிப்பாக கேரள முதல்வர் வி.எஸ்.அச்சுôனந்தன், கேரளாவிற்கு எதிராக தமிழகம் கிளர்ந்தெழவதைக் கண்டு, புத்திசாலித்தனமாக, "சேலம் கோட்டத்தை எதிர்க்கவில்லை, அமைத்துக்கொள்ளுங்கள், கோவை திருப்பூரை பாலக்காடு கோட்டத்தில் இருக்க வேண்டும்" என ரொம்ப பெருந்தன்மையோடு கூறியுள்ளார். கடந்த 50 ஆண்டுகளில் கேரளாவில் உள்ள சின்ன சின்ன ரயில்வே நிலையங்கள் கூட அனைத்து வசதிகள் உள்ளதாக மாற்றப்பட்டுள்ளது. தமிழகத்தில் உள்ள பெரு நகரங்களான கோவை-திருப்பூரில் கூட அத்தகைய வசதி கிடையாது. தற்போதுள்ள நிலைகூட குறிப்பாக 96-க்குப் பிறகு தான் ஏற்பட்டுள்ளது. இந்திய அரசில் நமது தமிழககட்சிகள் பங்கு பெற்ற பிறகு தான் இத்தகைய மாற்றங்கள் உருவானது என்பது மறுக்க இயலா உண்மை.

சேலம் ரயில்வே கோட்ட விவகாரத்தில் மாநிலக் கட்சிகள், தேசியக் கட்சிகள், இயக்கங்கள் என அனைவரும். சேலம் ரயில்வேகோட்ட பாதுகாப்பு குழு என்ற பெயரில் ஒருங்கிணைந்து கேரளாவிற்கு எதிராக "சேலம் கோட்டத்தை தடுக்கும் கேரளாவிற்கு செல்லும் ரயில்களை தடுப்போம், சேலம் கோட்டத்தை வர விடாமல் செய்யும் மலையாளிகளுக்கு செல்லும் பொருட்களை தடுப்போம்" என போராடிவரும் வேளையில் கேரளாவிற்கு ஆதராவாகவும் தமிழ்நாட்டிற்குள் சில குரல்கள். "இப்படி செய்தால் ஒருமைப்பாடு கெட்டுப் போகாதா? இரு மாநிலங்களுக்கிடையே பகைமை வளராதா? நாமெல்லாம் இந்தியர்களில்லையா? உழைக்கும் மக்களில்லையா" என குறுக்கு சால் ஓட்டும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்கள் தமிழகத்தை தந்திரமாக ஏமாற்றி வருகிறார்கள். சேலம் கோட்டப் பாதுகாப்புத் தலைவர் கோவை இராமகிருட்டிணன் அவர்கள் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட கட்சி தனது நிலையை தெளிவாக அறிவிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.

மார்க்சிஸ்ட்டுகளின் சிந்தனைக்கு...

இந்தியாவை, அமெரிக்காவுக்கு அடிமையாக்கும் 1 2 3 இந்திய அமெரிக்க அனுசக்தி ஒப்பந்தத்தை தெளிவாக எதிர்ககும் மார்க்சிஸ்டுகள்,
கோவை-திருப்பூர் உள்ளிட்ட தமிழ்நாட்டு தொழில்நகரங்களை
கேரளாவிற்கு அடிமையாக்கும் நிலையை ஆதரிப்பது ஏன்?
இந்தியாவிற்கு ஒரு அஜென்டா..
கேரளாவிற்கு அஜென்டா..

இதைத்தான் பெரியார் சொல்வார்
"தலைக்கொரு சீயக்காய் தாடிக்கொரு சீயக்காய்"

No comments: