Thursday, September 6, 2007

சேலம் ரயில்வே கோட்டம் : “மலையாள” மார்க்சிஸ்ட்டுகள் ஓட்டம்...

சேலத்தை தலையிடமாகக் கொண்டு, ஒரு ரயில்வே கோட்டத்தை உருவாக்க வேண்டும் என்ற கோரிக்கை பலகாலமாக எழுப்பட்டு, அது நிறைவேறும் வேளையில், மலையாளிகளின் அடாவடியால் அதுவும் கையைவிட்டு போகும் நிலை உருவாகி உள்ளது. ஏற்கனவே, முல்லைப் பெரியாறு நீர் சிக்கலில் கேரள முதலமைச்சர் அச்சுதானந்தனின் அடாவடியால் கொதித்துப் போயிருந்த தமிழ்நாடு, சேலம் கோட்டத்திலும் இவர்கள் வேலை காட்ட ஆரம்பித்தவுடன் இவனங்களை ஏதாவது பண்ணணும் என்ற கோபம் கொழுந்து விட்டு எரிய, எரியும் கோபத்தில் எண்ணெய் விட்டார், பெரியார் திராவிடர் கழகத்தின் பொதுச்செயலாளர் கோவை.இராமகிருட்டிணன்.

“பத்திக்கிச்சி” தமிழக வேளாண்துறை அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம், கேரளாவிற்குச் செல்லும், கேரளாவிலிருந்து வரும் ரயில்களை மறிக்கப் போவதாக அறிவித்தார். இன்னொருபுறம், கோவையில் மறியல், சேலம் கோட்ட பாதுகாப்புக் குழு தலைவரும், பெரியார் திராவிடர்க் கழகத்தின் பொதுச்செயலாளர் கோவை.இராமகிருட்டிணன் அறிவித்தார். திருநெல்வேலி சட்டமன்ற உறுப்பினர் மாலை ராஜா அவர்கள் நெல்லையில் மறிக்கப் போவதாக அறிவிக்க, போராட்டத்தீ பரவியது.

இதனை எதிர்பார்க்காத மலையாளிகள், தங்களின் ஆபத்பாந்தவன், அனாதை ரட்சகனாய் விளங்கம் வி.எஸ்.அச்சுனாந்த சேட்டனிடம் ஓடி, “தமிழ்நாட்டு(பட்டி)” கருணாநிதிகிட்ட சம்சாரித்து ரயில ஓடவிடுங்கன்னு அழுதுப் புலம்ப, அச்சுனாந்த சேட்டனோ, “தமிழ்நாட்டு(பட்டி)” கருணாநிதி வேண்டாம். நம்ம மார்க்சிஸ்ட் (பட்டி) வரதராஜன் கிட்ட சொன்னா அறிக்கை விடும். ஆதரவு வாபஸ்னு மிரட்டும், நான் பார்த்துக்கறேன் என்று கூற மலைளயாளிகளுக்கோ மகிழ்ச்சி.

சொன்னபடி (மலையாள) கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்மாநில (நாடுன்னு போட்ட பிரிவினைவாதமாம்) செயலாளர் என்.,வரதராஜன் ஆகஸ்ட்-25-ல் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் அடடா, என்ன அருமையாய் விட்டுருக்கிறார். சில கண்டு பிடிப்புகளையும் நிகழ்த்தியுள்ளார். சேலம் கோட்டம் கோரிக்கை அப்பகுதி மக்களுடையதாம், சேலம் கோட்டம் அமைவதை கேரளா எதிர்க்கவில்லைனு லல்லு பிரசாத் சொல்றார்னு இவர் சொல்றார். சரி இவரோட கண்டு பிடிப்புகளைப் பார்ப்போம்.

சேலம் கோட்டம் என்பது தமிழ்நாட்டு மக்களின் ஏறக்குறைய 50 ஆண்டுகால கோரிக்கை. தமிழகப் பகுதியான கோவை போத்தனூரை தலையிடமாகக் கொண்டு இயங்கி வந்த போத்தனூர் இரயில்வே கோட்டம், மலையாள கோட்ட கண்கானிப்பாளர் ஒருவரால் ரகசியமாய், சட்ட விரோமாக கொண்டு செல்லப்பட்டு, பாலக்காடு ரயில்வே கோட்டம் என பெயர் மாற்றம் செய்யப்பட்டு, சுமார் 50 ஆண்டுகளாக தமிழர்களின் தலையில் மிளகாய் அரைக்கப்படுகிறது. ஒருவேளை பாலக்காட்டில் இருப்பதை சேலத்துக்கு மாற்று எனக் கேட்டு அதை அச்சுதானந்த சேட்டனும், அவரோட சேச்சிகளும் எதிர்த்தால் அதில் கூட ஒரு லாஜிக் இருக்கிறது. ஆனால், புதுசா ஒரு கோட்டம் தமிழ்நாட்டுல ஆரம்பிச்சா அதை எதிர்க்க, கப்பகிழங்கும், நேந்திரம் பழம் சிப்ஸ் சாப்பிட்டுட்டு வந்தா, காலம்காலமா காரம் சாரமா கருவாட்டுக் குழம்பு சாப்பிடும் தமிழ்நாட்டுகாரங்க ரயிலை மறிக்க போறம்னு கிம்பினா நம்ம தமிழ்(பிரிவு) மாநிலச் செயலாளரய்யா, என்(னமோ) வரதராஜன் கோபிச்சிக்கிறார்.

சேலம் கோட்டம் அமைவதை கேரளா எதிர்க்கவில்லைனு, லல்லு பிரசாத் சொல்லி இருக்கிறாராம். சரிங்க. அச்சுதானந்த சேட்டன் சொல்லலியே, அவர் வேணும் சொன்னாறா? அதுமட்டுமா சொல்றாரு, தமிழ்நாட்டு முதல்வர் “போக்கிரித்தனமான நடந்து கொள்கிறார்னு” கேரள போக்கிரி மன்னிக்கவும் முதல்வர் நம்ம சேட்டன் சொன்னாரே அப்ப நம்ம மார்க்சிஸ்ட் அய்யாவ, பொலிட்பிரோவுல வச்சி பூட்டிட்டாங்களா தெரியவில்லை. தெரிஞ்சவங்க யாராச்சும் சொன்னீங்கனா எல்லோரும் தெரிஞ்சிக்கலாம்.

தமிழர்களிடம் சந்தா வசூலித்து கட்சி நடத்தி மலையாளிக்கு ஆதரவா அறிக்கைவிடும் நம்ம அய்யாவ, மலையாள கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநில செயலாளர்னு சேலம் ரயில்வே ஸ்டேஷன் வாசல்ல உள்ள டீக்கடையில நாலு பேரு பேசிக்கினு இருந்தாங்க. அதனாலதான் நான் எழுதினேன் தவிர வேறொன்றுமில்லை. மத்திய ரயில்வே துறை அமைச்சர் லாலு பிரசாத் அளித்த உறுதிமொழியின் அடிப்படையில் தமிழக முதல்வர் வேண்டுகோளின்படி போராட்டம் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது. சேலம் கோட்டம் திறப்பு விழா திட்டமிட்டபடி நடக்கலனா போராட்டம் வெடிக்கும் சூழல் உள்ளது.

No comments: