Friday, October 5, 2007

இராமனின் சின்னப் புத்தி - கிஷ்கிந்தா காண்டம் சர்ககம்-1

தம்பீ வா! நான் சீதையுடன் அனுபவித்ததைக் கேள்!

அந்தரங்க மித்தரனான லட்சுமணன் சமீபத்திலிருந்தாலும் விரகதாபம் மேலிட்டு இந்திரிய சவாதீனமற்று பிரலாபித்தார்... (பக்கம் 2)

காமம் வாட்டுகிறதே!

சீதையை விட்டுப் பிரிந்து தவிக்கும் என்னைப் பலவித பட்க்ஷிகளும் மிருகங்களும் சப்திக்கும் வசந்த காலம் அதிகமாக வாட்டுகிறது. (பக்கம் 4)

இங்கேதான் இன்பம் அனுபவித்தோம்!

முன்னொரு சமயத்தில் சீதை ஆசிரமத்தில் இருக்கும் பொழுது இந்த பட்க்ஷியின் சப்தத்தைக் கேட்டு ஆசைமிகுந்த என்னை அழைத்துப் பலவிதமான இன்பங்களை அனுபவித்தாள், ஆகையால் அவளை விட்டுப் பிரிந்த பிறகே இது இவ்வளவு துக்கத்தைத் தருகிறது.” (பக்கம் 5)

தகுந்த நேரத்தில் கவர்ந்து சென்றானே!

நாம் நகரத்திலிருக்கும் பொழுது இராவணன் சீதையை எடுத்துப் போகாமல், ஏகாந்ததத்தில் பரம சுகங்களை அனுபவிக்கத் தகுந்த இந்தக் காட்டில் வந்திருக்கும் பொழுது எடுத்துப் போனானே. (பக்கம் 6)

அவளுடன் சுகிப்பவனே பாக்கியசாலி!

இப்படிப்பட்ட அழகிய தேசங்களிலும் காலங்களிலும் பிரிய நாயகியுடன் இஷ்டபோகங்களை அனுபவிப்பவர்களே பாக்கியசாலிகள். (மேற்படி பக்கம்)

என்னைப் பார்த்தாலே சேர்ந்து சுகம் கொடுப்பாள்!

என்னைப் பார்த்தால் உண்டாகும் ஆனந்தத்தால் மலர்ந்த கண்களுடன் சீதையும் இப்படியே என்னைச் சேர்ந்து சுகத்தைக் கொடுப்பாள் அல்லவா?” (பக்கம் 7)

பட்க்ஷிகளைப் பார் என் காமத்தை வளர்க்கிறது!

பட்க்ஷிகள் சந்தோஷமேலிட்டு விளையாடுவதற்கு ஒன்றை ஒன்று கூப்பிடுவதைப் பார்த்தால் எனக்கு ஆசையை வளர்ப்பதற்கே இப்படிச் செய்கின்றன என்று எண்ணுகிறேன். (மேற்படி பக்கம்)

வசந்த ருதுவில் யாரிடமும் வசப்பட்டுவிடுவாளோ!

ஜானகி இருக்குமிடத்தில் வசந்தகாலம் உண்டானால் அவளும் பிறர்க்கு வசப்பட்டு என்னைப்போல துக்கப்படுவாளல்லவா? அவளைக் கொண்டுபோய் வைத்திருக்குமிடத்தில் ஒரு வேளை வசந்த ருது உண்டாகாது. அவளிருக்குமிடத்தில் வசந்த ருது உண்டென்றே ஒன்புக்கொண்டாலும் பிறரால் பயமுறுத்தப்பட்டு துன்பப்படுகையில் அவள் என்ன சுகத்தை அனுபவிப்பாள்?” (மேற்படிபக்கம்)

சீதையிடம் சுகம் கண்டாலொழிய உயிர்வாழேன் சீதையிடம்!

அழகுள்ள ஜானகியை அடிக்கடி ஞாபகம் செய்து எனக்கு அவளிடத்தில் உள்ள ஆசையை வளர்க்கின்றன. இந்த பம்பை நதியில் அடிக்கும் சகமான காற்றை சீதையும் என்னிடத்திலிருந்து அனுபவித்தால் ஒழிய நான் பிழைக்கமாட்டேன்.

குறிப்பு: இவ்விதம் இராமன் சீதையின் மீது காமம் கொண்டு கதறுகிறான். அதுவும் யாரிடம்? தன்னுடைய தம்பி லட்சுமணனிடம் கூறுகிறான். இவன் எப்படியெப்படி, எங்கெங்கே சீதையுடன் சேர்ந்து படுத்திருந்தானோ அதைத் தன் தம்பியிடம் கூறுகிறான். மனிதப் பிறவியில்கூட யாராவது இப்படிக் கூற கேட்டிருக்கிறோமா? அதிலும் தன்னுடைய தம்பியிடமே இந்த விஷயங்களைக் கூறுகிறவன் கடவுளின் அவதாரம் என்பதாகக் காணமுடியவில்லை. இதனால், பார்ப்பனர்கள் கடவுளர்களின் யோக்கியதை, அவதாரங்களின் அநாகரிகம், பார்ப்பனப் பழக்க வழக்கங்கள் முதலியன விளங்குகின்றன.

இராமன் ஒரு இடத்தில் நான் அயோத்தியில் இருக்கும் போது இராவணன் சீதையைக் கவர்ந்து சென்றிருந்தால் அக்கறை இல்லை. நானும் சும்மா இருந்திருப்பேன். ஆனால் இங்கு அனுபவிக்கத் தகுந்த யாரும் இல்லாத இந்த இடத்தில், நான் சீதையுடன் எப்பொழுதும் சுகம் அனுபவிக்க ஆசை கொண்டிருந்த சமயம் பார்த்துக் கவர்ந்து கொண்டு போய்விட்டானேஎன்ற கருத்தில் துக்கப்படுகிறான்.

ஆகவே, இராவணன் சீதையை அயோத்தியிலேயே தூக்கி சென்றிருந்தால் இராமன் சும்மா இருந்திருப்பான் என்றும் தெரிகிறது. பாலம் அமைத்து மீட்டிருக்க மாட்டான் என்பதும் தெரியவருகிறது. மேலும் இராமன் காட்டுக்கு வந்தது; சீதையுடன் சதாகாலமும் சேர்ந்து இன்பம் அனுபவிக்க வேண்டும் என்பதற்காக வந்திருப்பான் என்றும் தெரிகிறது.

இப்படிக் கடவுள் அவதாரத்தைப் பார்ப்பனர்கள் கொஞ்சமும் அறிவில்லாத முறையில் சித்தரித்து எழுதுவதால், கடவுளுக்கும், கடவுள் அவதாரம் என்பதற்கும் எந்த அளவில் பெருமையைக் கொடுப்பதாக இருக்கிறது என்பதைச் சிந்தியுங்கள்.

ஆரியர்கள் பொய் சொல்வதில் மிகத் துணிவுள்ளவர்கள் எப்படியெனில்:

அவர்கள் குறிப்பிடும் காலக் கணக்கெல்லாம் யுகம், சதுர்யுகம். லட்சம் சதுர்யுகம், கேரி சதுர்யுகம் என்றுதான் குறிப்பிடுவார்கள்.

அவர்களது ரிஷிகள், முனிவர்கள், தேவர்கள் என்பவர்கள் எல்லாம் கடவுள்களுக்கே சாபம் கொடுக்கக் கூடியவர்களாகவே இருப்பார்கள்.

தாசிகள்கூட பெரிய தவ சிரேஷ்டர்களுக்குச் சாபம் கொடுப்பார்கள்.

ஆண்களைப் பலாத்காரம் செய்த விபசாரிகளையும் பதிவிரதை லிஸ்ட்டில் சேர்த்துவிடுவார்கள்.

மூன்று அடி உயரமுள்ள குரங்கு, 1000 அடி உயரம் தன்னை உயர்த்திக் காட்டும்.

10 அல்லது 150 பவுண்டு எடையுள்ள குரங்குகள் லட்சம், பத்து லட்சம், கோடி, நூறுகோடி பவுண்டு எடையுள்ள மலைகளைத் தூக்கி வீசி எறிந்ததாகவும் அதனால் பல லட்சம் பேர்கள் செத்ததாகவும் எழுதுவார்கள்.

இப்படியாக, இவை போன்ற ஏராளமான பொய்கள், புனைச் சுருட்டுகளை இராமாயணத்தில் ஏராளமாகக் காணலாம்.

(மேற்கண்ட தகவல்கள் அனைத்தும் சி.ஆர்.சீனிவாசய்யங்கார் மொழிபெயர்த்த வால்மீகி இராமாயணத்தில் உள்ளது)

தொடரும்...