Friday, December 28, 2007

பார்ப்பன “இந்து”வின் சிங்களப் பாசமும்; தமிழினத் துரோகமும் ...

பார்ப்பன “இந்து” நாளிதழ் வழக்கம் போல் தனது துரோகக் குரலை மீண்டும் ஒரு முறை பதிவு செய்துள்ளது. 25.12.2007 அன்றைய இந்து நாளிதழில் தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவராக, உலகத் தமிழர்களின் காவலராக விளங்கி வரும் மாவீரன் பிரபாகரனுக்கு பின்னால் விடுதலைப் புலிகள் இயக்கம் என்னவாகும்? என ஓர் ஆராய்ச்சி (?) கட்டுரை வெளியிட்டுள்ளது.

தமிழர்களுக்கு, எதிராக எழுதுவது, செயல் படுவது என்ற ஒற்றை இலக்க அரசியல் வழி செல்லும் பார்ப்பன "இந்து" இதுவரை அவதூறுகளை அள்ளிவிட்டு, பரபரப்புச் செய்திகள் என பட்டியலிட்டு தமிழன் பணத்தை கொண்டு தங்கள் பார்பனத் தொப்பைகளை நிரப்பி வந்தவர்கள், தங்களை எதிர்க்க யார் இருக்கின்றார்கள் என்ற மமதையில், மாவீரன் பிரபாகரன் கொல்லப்பட வேண்டும் என்றும், அதன் பிறகு புலிகள் இயக்கம் இல்லாமல் போய்விடட்டும் என வாயிலும் வயிற்றிலும் அடித்துக் கொண்டு ஒரு பினாமி மூலம் கட்டுரை எழுதி சாபம் விட்டுள்ளார்கள்.

தமிழ் நாட்டில், தமிழன் பணத்தில் பத்திரிக்கை நடத்தி கொண்டு தமிழர் எதிரிகளிடம் "லங்கரத்னா" விருது பெரும் இந்து ராம் கும்பலுக்கு தமிழும், தமிழ்நாடும், தலைவர் பிரபாகரனும் தீண்டத்தகாதவர்கள்தான். “சூத்திரன் அரசாளும் தேசம் - பார்ப்பானுக்கு எதிரி தேசம்” - என்ற மனுதர்மத்தை வாழ்க்கை தர்மமாக்கி வாழம் இந்து - ராம்களால் தமிழனின் வீரத்தை ஏற்றுக் கொள்ள முடியுமா?

சிங்க இனவெறியை, அதன் பயங்கரவாதப் பதிவுகளைக் கண்டிக்கவோ, கட்டுரை எழுதவோ, மனம் வாராத தமிழ் நாட்டு அம்பிகளுக்கு, புலிகளின் வான்படை பயங்கரவாதமாகத்தான் தெரியும். நீங்கள் கட்டுரை மூலம் கக்கும் பார்ப்பன விஷத்தை, முறிக்கும் மருந்தை தந்தை பெரியார் எங்களுக்கு தந்து விட்டு போயிருக்கின்றார் என்பதை ஆரியக் கூட்டத்திற்கு அறிவுரையாகவே சொல்வோம்.

வன்னிக்காடுகளுக்குள் வாரிசு அரசியல், எப்படி உங்களால் எழுத முடிகிறது. மகள் சரசுவதியை புணர்ந்த பிரம்மாவின் பிள்ளைகள் தானே நீங்கள். உங்களால் எதுவும் முடியும். உங்களுக்கொன்றை சொல்லி கொள்கிறோம். தன் மகனையோ மகளையோ "போருக்கு" அனுப்பி வைக்கும் வரலாறு எங்களுக்குச் சொந்தம். உங்களுக்கு "ரூமுக்கு" அனுப்பி வைக்கும் வரலாறே சொந்தம்.

சார்லஸ் அந்தோணி - வான் புலிகளின் வைரம் பாய்ந்த நெஞ்சு. உனக்கு விருது வழங்கிய சிங்களவனிடம் கேள்! வான்புலிகள் வரலாறு, போர்களத்திற்குச் சென்றால் மந்திரி பதவி கிட்டாது, மரணமே. என் தம்பியின் வித்து, நாளைய ஈழவிடுதலையின் சொத்து. இது உங்களுக்கு புரிய வாய்ப்பில்லை. தமிழன் விதைத்ததை அறுவடை செய்தே பழக்கப்பட்டவர்கள் நீங்கள் உங்களுக்கு புரிய வாய்ப்பில்லை.

காஞ்சி மட சங்கரன்களின் சல்லாப லீலைகளைப் பட்டியலிட்டு தமிழ்நாட்டு ஊடகங்கள, பக்கம் பக்கமாக செய்தி வெளியிட்டபோது. பார்ப்பன "இந்து" வின் வாயிலிருந்தது எது(?) சின்ன, பெரிய சங்கரன்கள் ஆற்றிய அருந்தொண்டுகளை (எழுத்தாளர் அனுராதரமணன், சொர்ணமால்யா உள்ளிட்டவர்களை கேட்டால் கூறுவார்கள்) இப்படி ஆய்வு செய்து வெளியிட்டிருந்தால் நாம் “இந்து”வின் நேர்மையை பாராட்டலாம். ஆனால், அவைகள் குறித்து இந்து ராம்களின் பேனா எழுத மறந்தது ஏன்?

உங்களை, உங்கள் ஆச்சாரங்களை, உங்கள் ஆதிக்கங்களை அராஜகங்களை பாதுகாக்க, நாறிப்போன, அருவெருக்கதக்க காஞ்சி மடம் உனக்குத் தேவை. அது களங்கப்படுவது உனக்கு கண்ணீரை வரவழைக்கும் என்றால், எம்மினத்தின் மான - அவமான வரலாற்றை மீட்டெடுக்கும் புலிகளும் எம் தலைவனும் எங்களுக்கு உயிரல்லவா? எங்கள் உயிரைக் களங்கப்படுத்தும் உங்களின் செயல்கள் ஒவ்வொன்றும் பதிவு செய்யப்படுகிறது எச்சரிக்கை.

ஆடு, மாடுகளை மேய்த்துக் கொண்டிருந்த நீங்கள் எங்கள் மன்னர்களுக்கு கூட்டிக்கொடுத்து பதவி பெற்றீர்கள். எங்கள் மன்னர்களை வெள்ளையர்களிடம் காட்டிக் கொடுத்து ஆட்சி, அதிகாரம் பெற்றீர்கள். நீங்கள் எதற்கும் துணிந்தவர்கள். மான-அவமானம் உங்களுக்கேது. ஆனால், எங்களுக்குண்டு.

எங்களின் இலக்கியம் வீரத்தையும், காதலையும் மட்டும் போற்றியது. உங்கள் இலக்கியமோ, காட்டிக் கொடுப்பதையும் கூட்டிக்கொடுப்பதையும் பரப்பியது. வரலாறு முழுக்க இது தானே. எங்கள் வரலாற்றில் நீங்கள் உருவாக்கி வைத்துள்ள பிழைகளை, கழுவும் காலம் இது. தமிழின விடியலை தந்தை தொடங்கி வைத்தார், தம்பி முடித்து வைப்பார் எச்சரிக்கை.

ஆசை வெட்கமறியாது என்பது பழமொழி அதை மீண்டும் ஒரு முறை தினமலர்(ம்) நாளிதழ் நிருபித்துள்ளது. "இந்து" 25.12.2007 அன்று வெளியிட்ட கட்டுரையைத் தமிழில் மொழி மாற்றம் செய்து 27.12.2007 அன்று தினமலர் வெளியிட்டுள்ளது. ஏதோ தாங்களே சிறப்பு நிருபரை அனுப்பி ஆராய்ச்சி செய்து வெளியிட்டது போன்ற தோற்றத்துடன் இந்த கட்டுரையை தினமலர் வெளியிட்டு உள்ளது. சிங்களவன் தந்ததை தின்று, "இந்து" எடுத்த வாந்தியை அழகான குடுவையில் காட்சிக்கு வைத்து காட்டும் வித்தையை பார்ப்பன "தினமலர் " செய்துள்ளது.

உங்களுக்கொன்றை மீண்டும் ஒரு முறை சொல்லிக் கொள்கின்றோம்.

"ஜாரின் கொடுமை லெனினை ஈன்றது
பார்ப்பனக் கொடுமை பெரியாரை ஈன்றது.
சிங்கள பேரினவாதம் தலைவர் பிரபாகரனைத் தந்தது.
வெற்றிடத்தை காற்று நிரப்பும் என்ற அறிவியலை நம்புகிறவர்கள் நாங்கள்.
பெரியாருக்கு பின்னால் தமிழ்நாடு எங்கள் காலடியில் என்று
இறுமாந்து இருந்தீர்கள்! ஏமாந்து போனீர்கள்!
பிரபாகரனுக்கு பின்னால் ஈழம் சிங்களவன் வசம்
எழுதுகிறீர்கள்! ஏமாந்து போவீர்கள்!

மாவீரன் பிரபாகரன் உயிரை ஓர் உடலில் தேடுகிறீர்கள். அது எட்டரை கோடி தமிழர்களின் உடலில் என்றோ கலந்து விட்டது.

பார்ப்பன - பரதேசிகளே! எழுதிக் கொள்ளுங்கள்...
நாளைய வரலாறு, தமிழின வரலாறு
உலகின் ஆதரவு விரைவில் கிடைக்கும்,
எங்கள் தமிழீழம் வரலாறு படைக்கும்.

Monday, December 24, 2007

பெரியார் என்ற பட்டம் கொடுத்த பெண்கள் மாநாடு - படங்கள்!













மாநாட்டுத் தலைவரை ஊர்வலமாக அழைத்து வருதல்.













மாநாட்டில் கலந்துக் கொண்ட பெண்கள்.

Sunday, December 23, 2007

பெரியார் என்ற பட்டம் கொடுத்த பெண்கள் மாநாடு!

மாநாட்டுத் தலைவரை ஊர்வலமாக அழைத்து வருதல். மாநாட்டில் கலந்துக் கொண்ட பெண்கள். சாதிப் பெயரை பெயருக்குப் பின்பு ஒட்டி அழைப்பது என்பது இந்நாட்டில் வெகுகாலமாக இருந்துவந்த வழக்கமாகும். அது ஒரு மரியாதையாகவும் பார்ப்பனிய சமூக அமைப்பில் கருதப்பட்டது. அந்தவகையில் தந்தை பெரியாரும் ஈ.வெ. ராமசாமி நாயக்கர் என்றே அழைக்கப்பட்டார். 'நாயக்கர்' என்றாலே அவரைத்தான் குறிக்கும் என்ற அளவிற்கு நிலைமை இருந்தது. குடி அரசு இதழில் ஆசிரியர் ஈ.வெ.ராமசாமி நாயக்கர் என்று தான் 18.12.1927 வரை குறிக்கப்பட்டு இருந்தது. 25.12.1927 முதல் 'குடி அரசு' இதழ் நாயக்கர் பட்டத்தைக் கைவிட்டது. அதன்பின் அய்யா அவர்களைக் குறிப்பிடும் பொழுது 'பெரியார்" என்ற சொல்லைச் சேர்த்துக் குறிப்பிடுவது வழக்கமாகிவிட்டது என்றாலும் 'பெரியார்' என்பதை ஒரு மாநாட்டின் தீர்மானம் மூலம் தமிழ்நாட்டு மக்களின் ஏகோபித்த கருத்தாக வெளியானது என்பது, சென்னையில் நடைபெற்ற "தமிழ் நாட்டுப் பெண்கள் மாநாட்டில்" தான். அத்தகைய சிறப்புமிக்க மாநாட்டு நிகழ்வுகளின் தொகுப்பை இங்குப் பதிவு செய்கிறோம். 'தமிழ்நாட்டுப் பெண்கள் மாநாடு 5000 பெண்கள் விஜயம் பல்லாயிரக்கணக்கான ஆண்கள் வெளியில் நின்றிருந்தனர்' சென்னை 13.11.1938 முற்பகல் 1.00 மணிக்கு சென்னை பெத்துநாயக்கன்பேட்டை கிருஷ்ணாங் குளத்தையடுத்து காசி விஸ்வநாதர் கோயில் முன்பிருந்து தமிழ்நாட்டுப் பெண்கள் மாநாட்டு ஊர்வலம் புறப்பட்டது. மாநாட்டுத் தலைவர் திருவாட்டி திருவரங்க நீலாம்பிகை என்ற நீலக்கண்ணியம்மையார், தோழர்கள் தாமைரைக்கண்ணியம்மையார், பண்டித நாராயணியம்மையார், டாக்டர் தருமாம்பாள், மூவாலூர் இராமாமிர்தம் அம்மையார், பார்வதி அம்மையார், மலர் முகத்தம்மையார், கலைமகளம்மையார் முதலியோரும் தலைவர் தோழர் ஈ.வெ.ராமசாமி, தோழர் அ.பொன்னம்பலம் உள்ளிட்ட 5000-த்திற்கு மேற்பட்டவர் ஊர்வலத்தில் கலந்து வந்தனர். மாநாட்டுத் தலைவர், திறப்பாளர், வரவேற்புக் கழகத் தலைவர்களைக் கோச்சில் வைத்து அழைத்துவரப்பட்டது ஆயிரக்கணக்கான பெண்கள் தமிழ்க் கொடிகளை ஏந்தி தமிழ் வாழ்க! தமிழ்நாடு தமிழருக்கே! இந்தி வீழ்க! தமிழ்ப் பெண்கள் வாழ்க! தமிழர் வாழ்க! என்ற கோஷங்களிட்டு வந்தனர். தமிழ்ப் பெண்கள் தமிழ் வாழ்த்துகள் பாடி வந்தனர். ஊர்வலத்தில் பெண்கள் மட்டிலும் 2000 பேர்கட்கு மேலிருந்தனர். ஊர்வலம் குப்பையா தெரு, தங்கசாலைத் தெரு, ஆதியப்ப நாயக்கன் தெரு. வால்டேக்ஸ் ரோடு ஆகியவைகளின் வழியாக வந்து, சரியாக 2 மணிக்கு மாநாட்டு கொட்டகையாகிய ஒற்றை வாடை நாடக கொட்டகைக்கு வந்து சேர்ந்தது. மாநாட்டு கொட்டகை ஊர்வலம் வரும் முன்பே கொட்டகையிலும், கொட்டகைக்கு வெளியிலும், பல்லாயிரக்கணக்கான மக்கள் நிரம்பியிருந்தனர். கொட்டகையில் ஒலிபெருக்கிக் கருவி அமைக்கப்பட்டிருந்தது. மாநாட்டில் பெண்கள் 5000 பேர்கட்கு மேல் கலந்து கொண்டனர், மாநாட்டுக் கொட்டகை வாழைமரங்களாலும், கொடிகளாலும், வரவேற்பு வளைவுகளாலும் மிகச்சிறப்பாக அலங்கரிக்கப்பட்டிருந்தது. வெளியில் நிற்போர்கட்கும் கேட்குமாறு ஒலி பெருக்கி அமைக்கப்பட்டிருந்ததால், பல்லாயிரக்கணக்கான மக்கள் வெளியில் இருந்தே பேச்சுகளைக் கேட்டனர். முதலில் தலைவர், திறப்பாளர்களை வைத்து ஒரு குரூப் போட்டோ எடுக்கப்பட்டது. பின்னர் மாநாட்டு வரவேற்புக் கழகத் தலைவரின் வேண்டுகோளுக்கிணங்கி திருவாட்டி மீனாம்பாள் சிவராஜ் அவர்கள் மூவரசர் தமிழ்க் கொடியை ஏற்றிவைத்தார். திருவாட்டிகள் சி. கலைமகள்பட்டு, தாமரைக்கண்ணியம்மையார், பார்வதியம்மையார் முதலியவர்கள் தமிழ்ப்பாட்டுக்கள் பாடினர், பின்னர், திருவாட்டி- திருவரங்க நீலாம்பிகை அம்மையாரை தலைமையேற்குமாறு வரவேற்புக் கழக தலைவர் கேட்டுக் கொண்டார். அதை ஆதரித்து திருவாட்டிகள் மூவாலூர் இராமிர்தம் அம்மையார், மலர்முகத்தம்மையார், இராணியம்மாள் (தோழர் அண்ணாதுரையவர்கள் மனைவி) ஆகியோர் பேசினர். டாக்டர் எஸ். தருமாம்பாள் மாநாட்டுத் தலைவருக்கு ஒரு வரவேற்புப் பத்திரம் படித்துக் கொடுத்தார். தலைவர் தமது தலைமை பிரசங்கத்தை, ஆற்றினார், திருவாட்டி பார்வதியம்மையார் அவர்கள், ஈ.வெ.ரா. நாகம்மாள் திருவுருவப் படத்தைத் திறந்து வைத்தார். பின்னர் முக்கியமான பல தீர்மானங்கள் நிறைவேறின. - விடுதலை 14.11.1938. தமிழ்நாட்டுப் பெண்கள் மாநாடு நிறைவேறிய தீர்மானங்கள். சென்னை நவ14. ஆண்களில் தோழர்கள், தலைவர். ஈ.வெ.ரா., அ. பொன்னம்பலம், வேலூர் அண்ணல் தங்கோ, கனகசபை, குடந்தை ஜி.சுப்ரமணியம், எஸ்.ஏ.ரவூப், காஞ்சி பரவஸ்து இராஜகோபாலாச்சாரியார், சாமிஅருணகிரிநாதர், அ.சுப்பையாபிள்ளை, நகரதூதன் ஆசிரியர் மணவை திருமலைசாமி, சண்டே அப்சர்வர் ஆசிரியர் பி.பாலசுப்ரமணியன், பாரிஸ்டர் கே.சி. சுப்ரமணியம் செட்டியார், பல்லடம் பொன்னுசாமி, டாக்டர் சிற்சபை நடராசன், முருகேசன், தேவசுந்தரம், அரங்கநாதம், கணேசம், குமரகுரு, மாஜிமந்திரி எஸ்.முத்தையாமுதலியார், கோதண்டராம முதலியார் பி.ஏ.பி.எல்., சுந்தரராவ்நாயுடு பி.ஏ., பி.எல்., திருவொற்றியூர் சண்முகம் பிள்ளை, ரெவரெண்ட் அருள் தங்கையா, ஜஸ்டிஸ் ஆசிரியர் டி.ஏ.வி நாதன், மாயவரம் சம்பந்தம், சிந்தாதிரிப்பேட்டை ராகவேலு, அமிர்தவாசகம் மணியர், காஞ்சி சி.பி.தண்டபாணி, டாக்டர் வானமாமலை, நெல்லையப்பபிள்ளை, பி.ஏ.பி.எல்., வேலூர் பி.பெரியசாமி முதலியார். ஷர்புதீன் சாகிப், கவுன்சிலர் ஆர். சுப்ரமணியம், பி. சிவசங்கரன், காஞ்சிபுரம் தங்கவேலு முதலியார், ராவ்பகதூர் ஜம்புலிங்க முதலியார், (கடலூர்) கே.கே. ஆறுமுக முதலியார், இளஞ்சிய முதலியார், டி.வி. ஆதிசேஷ முதலியார், பண்டிட் எஸ்.எஸ் ஆனந்தம், கவுரவ மாஜிஸ்ட்ரேட் எம்.வரதராஜன், கயபாக்கம் ஜமீன்தார் முத்துலிங்கா ரெட்டியார், முத்துமல்லா ரெட்டியார், ஆர் என்.என் சாஸ்திரியார், வேலூர் புருஷோத்தமன், என். தண்டபாணி, நவசக்தி திரு.வி.உலகநாத முதலியார் ஆகியோரும் முக்கியமானவர்களாவர். மாநாடு வெற்றிகரமாக நடைபெற வேண்டிதோழர்கள் எஸ்.ஆர்.கண்ணம்மாள், ஈ.வெ.கி. ரங்கநாயகி அம்மாள், வரகனேரி ஜபமாலை அம்மையார், மாத்தூர் விசாலாட்சி அம்மையார், ராமசுப்பையா விசாலாட்சி, அலமேலு மங்கைத்தாயாரம்மாள், திருப்பத்தூர் அன்னபூரணி-கந்தசாமி, சாக்கோட்டை எஸ்.ஆர்.சாமி வைரத்தம்மாள், அண்ணாமலை நகர் வித்துவான் செந்தமிழ் சச்சிகிருஷ்ணமூர்த்தி, மாஜி மந்திரி, சர்.பி.டி. ராஜன், தலைவர் எஸ்.எஸ் பாரதியார், குடந்தை ஆர்.கி.வெங்கட்ராம்நாயுடு, கே.கே. நீலமேகம், வாணியம்பாடி சண்முக முதலியார், எஸ்.வி.லிங்கம், மாயவரம் சபாபதி, திருவையாறு திருவள்ளுவர் மாணவர் சங்கத்தார் வாழ்த்துச் செய்தி அனுப்பியிருந்தனர். தலைவரால் கொண்டுவரப்பட்டு, பல பெண்மணிகளால் ஆதரிக்கப்பட்டு தீர்மானங்கள் ஏகமனதாக நிறைவேறின. நிறைவேறிய தீர்மானங்கள் வருமாறு : - 1. இந்தியாவில் இதுவரையும் தோன்றிய சீர்திருத்தத் தலைவர்கள் செய்ய இயலாமற் போன வேலைகளை இன்று நமது தலைவர் ஈ.வெ.ராமசாமி அவர்கள் செய்துவருவதாலும் தென்னாட்டில் அவருக்கு மேலாகவும், சமமாகவும் நினைப்பதற்கு வேறொருவருமில்லாததாலும் அவர் பெயரை சொல்லிலும், எழுத்திலும் வழங்கும் போதெல்லாம் "பெரியார்" என்ற சிறப்புப் பெயரையே வழங்குதல் வேண்டுமென இம் மாநாடு எல்லோரையும் கேட்டுக் கொள்கிறது. 2. மணவினை காலத்தில் புரோகிதர்களையும், வீண் ஆடம்பர செலவுகளையும் விலக்கிவிட வேண்டுமென இம் மாநாடு கேட்டுக்கொள்கிறது. 3. மற்ற நாடுகளைப்போல் தமிழர்கள் ஒன்று பட்டு ஒரு சமூகமாய் வாழ்வதற்கு இன்று பெருந்தடையாய் இருப்பது சாதி வேற்றுமையாதலால், சாதி வேற்றுமைகளை ஒழிப்பதற்கு இன்றியமையாத கலப்பு மணத்தை இம் மாநாடு ஆதரிக்கிறது. 4. தமிழ் மாகாணத்தில் எல்லாப் பள்ளிகளிலும் தமிழ் மொழியை கட்டாயப் பாடமாக்க வேண்டுமென்று அரசாங்கத்தாரை இம் மாநாடு கேட்டுக் கொள்வதுடன், பிற மொழிகள் தமிழ் மொழிக்கு விரோதமாக பள்ளிகளில் கட்டாயப் பாடமாக வைக்கக் கூடாதென தீர்மானிக்கிறது. 5. சென்னையில் முதலாவது மாகாண நீதிபதியாக இருக்கும் தோழர் அபாஸ் அலி அவர்கள், காலஞ்சென்ற பா.வே.மாணிக்க நாயக்கரவர்கட்குத் தமிழ் தெரியாது. அவர் தெலுங்கர் என்று கூறியதையும், நாடார் சமூகத்தை கேவலமான வார்த்கைகளால் கூறியதையும், தோழர் மு.இரா கவையங்கரர், தொல்காப்பியம் 2000 ஆண்டுகட்டு முற்பட்டது என்று கூறியதை மறுத்து 50 ஆண்டுகளுக்கு முற்பட்டது என்று கூறியதைக் கண்டிப்பதுடன், தமிழறிவும் நூலறிவும் இல்லாத ஒரு நீதிபதி தன்னை மீறிக்கோர்ட்டில் பேசி வருவதை அரசாங்கத்தாரும், அய்க்கோர்ட்டாரும் கவனித்து ஆவன செய்யும்படி இம் மாநாடு தீர்மானிக்கிறது. 6. சென்னை லார்டு எர்ஸ்கின் பிரபு அவர்கள் மதுரையில் காங்கிரஸ் மந்திரிகள் அரசாங்கத்தை நன்றாக நடத்தி வைக்கிறார்கள் என்று பேசியதைப் பார்த்தால், தங்கள் காரியம் நடந்தால் போதுமானதென்றம், பார்ப்பனரல்லாத தமிழர்கள் நிலை எப்படியானாலும் தங்களுக்குக் கவலையில்லை என்பதைக் காட்டுகின்றதாகையால், கவர்னர் அவர்களின் அவ்வபிப்ராயத்தை வன்மையாகக் கண்டிக்கிறது. 7. இந்திய மாதர் சங்கம் என்னும் பேரால் தங்கள் கமிட்டிக் கூட்டத்திலும் மாநாட்டிலும் கட்டாய இந்தியை ஆதரித்து தீர்மானம் நிறைவேற்றியிருப்பதைக் கண்டிக்கிறது! 8. இந்திய மாதர் சங்கம் என்பது சில பார்ப்பனப் பெண்களும் பார்ப்பன அன்புபெற்ற தாய் மொழியறிவில்லாத சில பெண்களும் கூடிய கூட்டமெனக் கருதுகிறது. 9. இம் மாகாணத்தில் எப்பகுதியிலாவது பெண்களைக் கூட்டிக் கட்டாய இந்தியை நிறைவேற்ற வீரமிருந்தால் இந்திய மாதர் சங்கத்தார் செய்துபார்க்கட்டுமென இம்மாநாடு அறைகூவி அழைக்கிறது. 10. இந்தியை எதிர்த்துச்சிறைசென்ற ஈழத்து சிவானந்த அடிகள், அருணகிரி சுவாமிகள், சி.என் அண்ணாதுரை. எம்.ஏ. உள்ளிட்ட பெரியார்களையும், தொண்டர்களையும் பாராட்டுகிறது. 11. வகுப்புத் துவேஷக் குற்றம் சாட்டி 153 எ. 505 ஸி செக்ஷன்களின் கீழ் 18 மாதம் கடுங்காவல் தண்டனை அளித்த காங்கிரஸ் அரசாங்கத்தைக் கண்டிப்பதுடன், மகிழ்ச்சியுடன் தண்டனையை ஏற்று சிறை சென்ற தோழர் பி. சாமிநாதனை இம் மாநாடு பாராட்டுகிறது. 12. தோழர்கள் சண்முகானந்த அடிகளும். சி.டி. நாயகமும் சிறைசெல்வதை இம் மாநாடு பாராட்டுகிறது. 13. சென்னை நகர் தமிழ் நாடாதலாலும், தமிழர்கள் முக்கால் பாகத்து மேல் வாழ்ந்து வருவதாலும் இதுவரை முனிசிபாலிட்டியார் வீதிகளின் பெயரை ஆங்கிலத்திலும், தமிழிலும் விளம்பர பலகைகளில் போட்டு வந்திருக்க இப்போது புதிதாக தெருக்களுக்கு பெயர் போடுவதில் ஆங்கிலத்தில் மட்டும் போடப்பட்டு வீதிகளின் பெயர் தமிழில் போடமாமலிப்பதால் ஆங்கிலமறியாத மிகுதியான தமிழ்மக்கள் தெரு பெயர் தெரியாமல் தொல்லைப்படுவதை நீக்க தமிழிலும் வீதிகளின் பெயர் போடவேண்டுமென, சென்னை நகர சபையாரையும், மற்ற தமிழ்நாட்டு நகரசபைகளையும் இம் மாநாடு கேட்டுக் கொள்கின்றது. 14, சென்னை ரயில் நிலையத்தில் பீச், போர்ட், பார்க் என தமிழில் எழுதியுள்ளதை முறையே கடற்கரை, கோட்டை, தோட்டம் என தமிழில் எழுத வேண்டுமெனவும் அப்படியே ரயில் பயணச்சீட்டு (டிக்கெட்) களிலும் எழுத வேண்டுமெனவும் ரயில்வே கம்பெனியாரையும் சென்னை அரசாங்கத்தாரையும் இம்மாநாடு கேட்டுக் கொள்கிறது. 15. ஒரு அணா, நாலணா நிக்கல் நாணயங்களில் நாணயங்களின் மதிப்பைக் குறித்திருப்பதில் சுமார் மூன்று கோடிக்கு மேல் உள்ள தமிழ் மக்களுக்கு விளங்கும்படியாக தமிழிலும் குறிப்பிட வேண்டுமென அரசாங்கத்தாரை இம்மாநாடு கேட்டுக் கொள்கின்றது. 16. சென்னை அரசாங்க இந்திய மருத்துவப் பள்ளி சித்த வகுப்பில் நடைபெறும் பாடங்கள் ஒவ்வொன்றும் ஆங்கிலத்திலேயே பெரும்பாகம் நடைபெற்று வருவதை நிறுத்தி எல்லாப் பாடங்களையும் தமிழிலேயே நடத்த வேண்டுமெனவும், சித்த வகுப்பில் சேரும் மாணவர்கள் பள்ளிக் கூடப்படிப்பை ஆங்கிலத்தில் படித்து முடித்திருக்க வேண்டும் என்று கட்டாயாமிருப்பதை எடுத்து தமிழில் ஒரளவு இலக்கிய அறிவுடைய மாணவர்களை சேர்த்துக் கொள்ள வேண்டுமெனவும் சென்னை அரசாங்கத் தாரை இம்மாநாடு கேட்டுக் கொள்கின்றது. 17. இந்திய மருத்துவப்பள்ளியில் சித்த மருத்துவ வகுப்புக்கு வேண்டிய பாடங்களில் உடற்கூறு, உடற்தொழில், கெமிஸ்ட்ரி என்னும் ரஸாயன நூல், மெட்ரியா, மெடிக்கா, பிள்ளைபெறுநூல், முதலியவை தமிழில் இருப்பதாலும், அதனை அச்சிட்டு மாணவர்கட்கும், மற்றவர்கட்கும் பயன்படும்படி செய்விக்க அரசாங்கத்தாரை இம்மாநாடு கேட்டுக் கொள்கிறது. 18. மேற்கண்ட பாடபுத்தகங்களில் உடற்கூறு, கெமிஸ்ட்ரி, மெட்ரியா மெடிக்கல் முதலிய புத்தகங்கள் அய்ம்பது, அறுபது ஆண்டுகளுக்கு முன் அச்சிடப்பட்டவைகளை அரசாங்கத்தாருக்கு அச்சிடக்கொடுக்க இசைந்துள்ள சென்னை தென் இந்திய வைத்திய சங்கம் நிறுவியவரும், அமைச்சருமாகிய பண்டிட் எஸ்.எஸ். ஆனந்தம் அவர்கட்கு இம் மாநாடு நன்றி செலுத்துகிறது. 19. வியாபாரப் பத்திரிகைகளைப் போலல்லாமல் தமிழர் முன்னேற்றம் ஒன்றையே கருத்திற்கொண்டு பெரிய கஷ்டங்களுக்கிடையே ஒயாது உண்மையாய் உழைத்து வரும் விடுதலை, குடியரசு, நகர தூதன், பகுத்தறிவு, ஜஸ்டிஸ், சண்டே அப்சர்வர் முதலிய பத்திரிகைகளைத் தமிழ்ப் பெண்மணிகள் ஒவ்வொருவரும் கட்டாயம் வாங்கி படிக்க வேண்டுமாய் இம் மாநாடு கேட்டுக்கொள்கிறது. 20. பத்திரிகைகளின் வாயிலாகப் பணம் சம்பாதிப்பது ஒன்றையே எண்ணி தமிழர் இயக்கங்களைக் கேவலப்படுத்தி வெளிவரும் 'ஆனந்தவிகடன்,' தினமணி, தமிழ்மணி முதலிய தமிழ்ப் பத்திரிகைகளைத் தமிழர்கள் இனி வாங்கக் கூடாதெனவும் இம் மாநாடு கேட்டுக்கொள்கிறது. 21கணவனை இழந்த இளம் பெண்களின் துயர் நீங்க மாதர் மறுமணத்தை இம்மாநாடு ஆதரிக்கிறது. 22. தமிழ்நாட்டில் 100-க்கு 95 மக்கள் கண்ணிருந்தும் குருடராய், தாய்மொழியில் கையெழுத்து போடத் தெரியாத நிலைமையில் இருக்கையில் சென்னை முதல் மந்திரியார் அதற்காவன செய்யாமல் அதற்கு மாறாக இந்தியை கட்டாயமாக செய்திருப்பதையும் அதனை கண்டிக்குமுகமாகத்தான் தமிழ்நாட்டுப் பெருமக்களும், அறிஞர்களும் எவ்வளவோ எடுத்துச் சொல்லியும், மாபெருங் கூட்டங்கள் கூட்டி தெரிவித்தும், அதனை சிறிதும் பொருட்படுத்தாமல் பிடிவாதமாகயிருப்பதையும் இதைப்பற்றி தங்களுக்குள்ள மனக்கொதிப்பைக் காட்டும் முறையில் அமைதியாக மறியல் செய்பவரை சிறையில் அடைத்துக் கொடுமைப்படுத்துவதையும் இம்மாநாடு வன்மையாகக் கண்டிக்கிறது. 23. தமிழ் மொழியைக் காப்பாற்றும் முறையில் இந்தியைக் கண்டித்து மறியல் செய்து சிறை புகுந்த வீரர்களுக்கு இம்மாநாடு மனமார்ந்த நன்றி செலுத்துகிறது, தீர்மானங்களை விளக்கியும், தமிழ்ப் பெண்கள் நிலைமையை விவரித்தும் தோழர் ஈ.வெ.ரா ஒரு சொற்பொழிவாற்றினார். பின்னர் தீர்மானங்களை ஆதரித்தும் பெண்கள் நடந்து கொள்ள வேண்டிய நிலைமையை விளக்கியும் தோழர்கள் மீனாம்பாள் சிவராஜ், பண்டிதை ஆர். கண்ணம்மாள். கலைமகளம்மையார், இராமமிர்தத்தம்மையார், கமலாம்பாள், சிறுமி குஞ்சிதமணி, நீலாயதாட்சி, பண்டித திருஞான சம்பந்தம், சாமி சண்முகானந்தம் ஆர்.நாராயணி அம்மாள், மலர்முகத்தம்மையார், சாமி அருணகிரி நாதர், இராணி அம்மையார் (தோழர் அண்ணாதுரை மனைவி) தோழர் அண்ணாதுரை அன்னையார் ஆகியோர் பேசினர். தலைவர் முடிவுரைக்குப் பிறகு தோழர் வ.பா. தாமரைக்கண்ணம்மையார் நன்றி கூறினார். தோழர்கள் பார்வதியம்மையார், தாமரைக்கண்ணம்மையார்வாழ்த்துப் பாடினர். இரவு 9 மணிக்கு தமிழ் வாழ்க! தமிழ்நாடு தமிழருக்கே! இந்தி வீழ்க! பெண்ணுலகு தழைக்க என்ற பேரொலிகளிடையே மாநாடு இனிது முடிவுற்றது. - விடுதலை 16.11.1938. சிறைக்கு அனுப்பிய மாநாடு 13.11.1938 அன்று சென்னையில் நடைபெற்ற தமிழ்நாட்டுப் பெண்கள் மாநாட்டிலும் மறுநாள் சென்னை பெத்து நாயக்கன் பேட்டையில், இந்தி எதிர்ப்புப் போரில் சிறைசென்ற பெண்களைப் பாராட்டியும் பெரியார் பேசிய உரை, பெண்களைப் போராடத் தூண்டியது என்று கூறி, பெரியார் மீது வழக்குத் தொடுக்கப்பட்டு சிறைத் தண்டனையும் அளிக்கப்பட்டது என்பது நினைவில் கொள்ள வேண்டியவைகளில் முதன்மையானது.

Sunday, December 16, 2007

இராமாயணம் எதிர்ப்பு – சட்டப் போராட்டம்.

இராமர் பாலம் - கற்பனை, புளுகு மூட்டையுடன் தமிழகத்தில் நுழைந்து அரசியல் செய்ய முயன்ற பார்ப்பனக் கூட்டத்தினர், தமிழக முதல்வர் கலைஞரின் கள நடவடிக்கைகளை, கருத்தியல் நடவடிக்கைகளை எதிர் கொள்ள முடியாமல், நீதிமன்றம் என்ற பாதுகாப்பு வளையத்தில் பதுங்கிக் கொண்டு, வேறு வழியில் என்ன செய்வது எனத் தெரியாமல் தவித்துக் கொண்டு இருக்கின்றனர். இதனிடையே, பா.ஜ.க தலைவர் ராஜ்நாத் சிங், உத்தரபிரதேசத்தில், தந்தை பெரியார் அவர்கள் இராமாயணம் பற்றி எழுதிய ஆங்கில நூல் (Ramayan a True Reading 1957) “சச்சி இராமாயன்” என இந்தியில் மொழிபெயர்க்கப்பட்டு விற்பனையாவதை உ.பி முதல்வர் மாயாவதி தடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளார். அதை யாரும் கண்டு கொள்ளாத நிலையில் "சச்சி இராமாயண்" - நூலை எரிக்க தனது தொண்டர்களுக்கு ஆணைப் பிறப்பித்துள்ளார். வரலாற்று அறிவு சிறிதும் இல்லாத இந்த பார்ப்பன பா.ஜ.க. கூட்டமே தந்தை பெரியார் எழுதிய "சச்சி இராமாயண்” நூலின் வரலாற்றை தெரிந்துக் கொள்.

தந்தை பெரியார் அவர்கள் இராமாயணம் பற்றி எழுதிய ஆங்கில நூல் Ramayan a True Reading 1957-ல் சென்னையில் வெளியிடப்பட்டது. இதன் இந்தி மொழிபெயர்ப்பான "சச்சி இராமாயண்" இராமாயணப் பாத்திரங்கள் நூல் 1968-ல் கான்பூரில் வெளியிடப்பட்டது. இந்நூலின் விற்பனையையும், அதன் பிரச்சார வேகத்தையும் கண்டு ஆட்டம் கண்ட பார்ப்பனக் கும்பல், இந்துக்களின் மத உணர்ச்சியைப் புண்படுத்துவதாக கூறி உத்தரபிரதேச அரசு 1970 ஜனவரியில் நூல்களைப் பறிமுதல் செய்து, நூலையும் தடை செய்தது. இவ்வாறு விதிக்கப்பட்ட தடையை எதிர்த்து தோழர் லாலாபாய்சிங் யாதவ் என்பவர் அப்போது அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார்.

வழக்கை உயர்நீதிமன்ற "புல் பெஞ்ச்" விசாரணை செய்து, உத்தரபிரதேச அரசு விதித்த தடை உத்தரவு செல்லாது என்று தீர்ப்பு கூறியது. தீர்ப்பில், இ.பி.கோ.124 ஏ. 153 ஏ, 295 ஏ ஆகிய பிரிவுகளைச் சுட்டிகாட்டி இ.பி.கோ. 99 ஏ பிரிவின் படி தடை உத்தரவு செல்லாது என்று பார்ப்பன பண்டார கூட்டங்களுக்குப் பதிலடி தந்தது.

பார்ப்பன-ஆர்.எஸ்.எஸ். கும்பல் இதனைப் பொறுத்துக் கொள்ள முடியாமல் உத்தர பிரதேச அரசுக்கு நெருக்குதல் கொடுத்து அலகாபாத் உயர்நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்ய வைத்த்து. அப்போது உச்சநீதிமன்றத்தில் நீதிபதியாக இருந்த நீதியரசர் வி.ஆர்.கிருஷ்ணய்யர் அவர்கள், உத்தரபிரதேச அரசின் மேல் முறையீட்டை தள்ளுபடி செய்து "சச்சி இராமாயண்" நூலை வழக்கம் போல் விற்பனைச் செய்யலாம், பதிப்பிக்கலாம், எதற்கும் தடையில்லை என்று தந்தை பெரியார் அவர்களின் பிறந்த நாளில் (17.9.1976) வரலாற்று சிறப்பு வாய்ந்த தீர்ப்பை வழங்கினார். இத்தீர்ப்பை, நெருக்கடி கால தணிக்கை அதிகாரிகள் "விடுதலை" நாளிதழில் வெளியிட அனுமதி மறுத்தனர் என்பது குறிப்பிடதக்கது.

தந்தை பெரியாரின் கருத்துக்கள் எத்தனை வலிமை வாய்ந்தது என்பதற்கு உச்சநீதிமன்றம் வழங்கியுள்ள இந்தத் தீர்ப்பு ஒன்று போதும். பார்ப்பன - பா.ஜ.க. கும்பல் வார்த்தைகளை வெளியிடும் முன்னர், வரலாற்றை தெரிந்து கொள்ளட்டும். தீர்ப்பின் தமிழாக்கம்:

"இராமாயணப் பாத்திரங்கள்"/ "சச்சி இராமாயண்" மீது

தடை செல்லாது சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு! - 17.09.1976.

நீதிநாயகம் வி.ஆர்.கிருஷ்ணய்யர்

சில வழக்குகள் சமுதாய ஒழுங்கீன முறைகேடுகளுக்கு அப்பாற்பட்டதாக முகப்பிலேயே இருக்குமென்றாலும், ஜனநாயகத்தின் அடிப்படையான சுதந்திர உரிமைகளை அசைக்கும் வழக்காக இந்த வழக்கு அமைந்துள்ளது.
இந்த மேன் முறையீட்டு வழக்கானது உத்திரப்பிரதேச அரசு பிரிவு 99 ஏ குற்ற விசாரணை முறையீட்டுச் சட்டத்தின் கீழ் தமிழகத்தின் பகுத்தறிவு இயக்கத்தின் தந்தையும் அரசியல் மேதையுமான பெரியார் (ஈ.வெ.ரா) அவர்களின் இராமாயணத்தை (Ramayan a True Reading 1957) ஆங்கிலத்திலிருந்து இந்திப் பதிப்பாக்கிய புத்தகத்தை அரசாங்கம் பறிமுதல் செய்ய பிறப்பிக்கப்பட்ட ஆணை சம்பந்தப்பட்டதால் உயர்நீதிமன்றத்தின் தனி அனுமதி பெற்று வந்திருக்கிறது.

உத்திரப்பிரதேச அரசின் முறையீட்டுப்படி இந்தப் புத்தகமானது வேண்டுமென்றே கெட்ட எண்ணத்தோடு இந்திய குடிமக்களின் ஒரு பகுதியாகிய இந்துக்களுடைய உணர்ச்சிகளின் புனிதத் தன்மையைக் கெடுக்க வேண்டுமென்று வெளியிடப்பட்டதால் இந்திய தண்டனைச் சட்டம் 295 பிரிவு (ஏ) பிரகாரம் தண்டனைக்கு உட்படுத்தக்கூடிய குற்றம் ஆகும். இந்த அறிவிப்பு ஆணையின் பிற்சேர்க்கை சம்பந்தப்பட்ட புத்தகத்தின் ஆங்கில, இந்திப் பதிப்புகளில் குறிப்பிட்ட பக்கம், வரிகளில் உள்ள செய்திகள் சமுதாயத்தின் ஒழுக்க உணர்ச்சிகளைத் தகர்ப்பதாகத் தெரிவித்து இருக்கிறது.

இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட புத்தக வெளியீட்டாளரான எதிர்மனுதாரர் உயர்நீதிமன்றத்திற்கு மனு செய்து கொண்டதன் பேரில், அரசின் அறிவிப்பு ஆணையை நீதிபதிகளின் குழு ஒன்று செல்லுபடியாகாதென தீர்ப்பளித்துள்ளது.

பாதிக்கப்பட்ட உத்திரப்பிரதேச அரசு உயர்நீதிமன்றத்தின் தனி உரிமை பெற்று வழக்கை அதன் வழக்கறிஞரைக் கொண்டு முறையிட்டது. வழக்கறிஞரின் வாதப்படி அரசின் அறிவிப்பாணை செல்லும்படி ஆகக்கூடியது எனவும், தள்ளுபடி செய்யப்படுவதற்கான எந்தக் காரணமும் இல்லை எனவும், இந்தப் புத்தகமானது பெரும்பான்மையான இந்துக்களின் புனித உணர்ச்சிகளைப் புண்படுத்துவதாகவும், கடவுள் அவதாரங்களான இராமன், சீதை மற்றும் ஜனகன் முதலியோர்களை இழிவுப்படுத்துவதாகவும் அமைந்துள்ளது. உயர்நீதிமன்றம் பெரும்பான்மையான நீதிபதிகளின் தீர்ப்புப்படி அரசின் அறிவிப்பு ஆணையை பிரிவு 99 ஏ குற்றமுறை விசாரணை சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள பறிமுதல் செய்யப்படுவதற்கான காரணங்களை அரசு தெளிவாக்கவில்லை என்ற ஒரு காரணத்தினால் மட்டும் அரசுக்கு எதிரிடையாக தீர்ப்பளிக்கப்பட்டு இருக்கிறது.

பறிமுதல் செய்வதற்கான விளக்கம்

குற்றமுறைப் பிரிவு 99 ஏ தெளிவாக ஆராயப்பட்டால் அரசின் அறிவிப்பாணையின் குறைபாடுகளைத் தெரிந்து கொள்ளலாம். சட்டத்தின் கூறுகளை உற்று நோக்குங்கால், புத்தகம் பறிமுதல் செய்யப்படுவதற்கான காரணங்களை, மூன்று தலைப்புகளாகப் பிரித்துச் சொல்லப்பட்டிருக்கிறது. அச்சட்டத்தின் பிரகாரம் எந்த ஒரு ஆவணமோ எந்த ஒரு செய்தியை உள்ளடக்கியிருந்தாலும், அந்தச் செய்தியானது இந்திய குடிமக்களிடேயே வேற்றுமை உணர்ச்சிகளை வளர்க்கும் விதத்திலோ, பகைமையை வளர்க்கும் விதத்திலோ இருந்தாலும், சம்பந்தப்பட்ட அரசின் கருத்தானது அவற்றை பறிமுதல் செய்யப்படுவதற்கான காரண விளக்கங்களை கொண்டிருப்பதாக இருக்கவேண்டும். அதற்குப் பிறகு, சம்பந்தப்பட்ட மாநில அரசு அறிவிப்பு ஆணையின் மூலம் வெளியிடப்பட்ட புத்தகங்கள் பறிமுதல் செய்யப்பட வேண்டுமென உத்தரவு இடவேண்டும்.

சட்டத்தின் மூன்றாவது பிரிவாகக் காட்டப்பட்டுள்ள செய்தி விளக்கங்கள் அறிவிப்பு ஆணையில் தரப்பட்டுள்ளன என்பதனை முடிவு செய்தல் வேண்டும். உயர்நீதிமன்றம், அரசின் ஆணையில் இந்த விளக்கங்கள் தரப்படவில்லையென தள்ளுபடி செய்யப்பட்டதானது சரியில்லை என அரசு தரப்பில் ஆஜராகும் வழக்கறிஞர் வாதித்து, அரசு ஆணையின் பிற்சேர்க்கையில் அது விளக்கப்பட்டுள்ளதாக வாதிட்டார்.

நம் விருப்பத்திற்கேற்ற சட்ட விளக்கம் முறை அல்ல

மேலும் அவர் வாதிடுகையில், சம்பந்தப்பட்ட புத்தகத்தின், சம்பந்தப்பட்ட பக்கங்களில் உள்ள வரிகள் பறிமுதல் செய்யப்படுவதற்கான போதுமான விளக்கங்களோடு இருப்பதால் அரசின் அறிவிப்பு ஆணையில் இடப்பட்டுள்ள விளக்கம் தேவையில்லை எனவும், தவிர்க்க முடியாதது எனவும் குறிப்பிட்டார்.

அறிவிப்பு ஆணையின் பிற்சேர்க்கையில் பறிமுதல் செய்யப்படுவதற்கான காரணங்கள் கூறப்பட்டு இருப்பதால் அதுவே சட்டத்தின் மூன்றாவது பகுதியைப் பூர்த்தி செய்வதாக அமைகிறது. ஆகவே, சம்பிரதாய முறைப்படி தனி விளக்கம் கூறுவது தகுதியானது அல்ல என்றும், எதிர்மனுதாரரின் வழக்கறிஞர் எடுத்துக்காட்டிய சட்ப்பிரிவுகளில் விளக்கங்கள் தரப்பட வேண்டுமென வலியுறுத்தி கூறப்பட்டிருப்பதின் காரணமாக, அவற்றை நிராகரித்துவிட்டு நம் விருப்பத்திற்கு உட்பட்ட வகையில் சட்ட விளக்கம் கூறி பறிமுதல் செய்யப்பட்டது சரியானது என வாதிடுவது முறை அல்ல. அது அடிப்படை ஜீவாதார உரிமையின் பேச்சு சுதந்திரத்தைப் பறிப்பதும் சட்டத்திற்கு புறம்பானதுமாகும் என வாதிட்டார்.

அரசு தரப்பில் வாதிட்ட வழக்குரைஞர், வெளியிடப்பட்டுள்ள சில பகுதிகள் அரசு ஆணையின் பிற்சேர்க்கையில் காட்டப்பட்டுள்ள மாதிரி தெய்வீகத் தன்மை வாய்ந்த இராமன், சீதை ஜனகன் முதலியவர்களை இழிவுப்படுத்தும் விதத்திலும் உத்திரப்பிரதேசத்தில் வாழும் இந்துக்களின் உணர்ச்சிகளைப் புண்படுத்தும் வகையிலும் இருப்பதால் கோர்ட்டார் அவர்கள் கூர்ந்து கவனிக்க வேண்டுமென கேட்டுக் கொண்டார்.

எங்கள் கடமை

நாங்கள் அவருடைய வாதத்தை ஆராயுங்கால் ஜீவாதார உரிமைகள் விலங்கிடப்பட்டுள்ளதா? இல்லையா? என்பதனையும், எந்த அடிப்படை உணர்வுகளால் உந்தப்பட்டு உத்திரப்பிரதேச அரசால் பறிமுதல் செய்யப்படுவதற்கு ஆணையிடப்பட்டுள்ளது என்பதனையும் தெளிவுபடுத்த வேண்டும்.

நமது இந்திய நாடானது மதச்சார்பற்ற நாடு. எந்த ஒரு மதத்தினையும் தழுவியது அல்ல. இந்த நாடானது எந்த ஒரு மக்களின் நம்பிக்கையைப் பற்றிக் கவலைப்படுவதல்ல. ஆனால், மக்களின் உரிமைகளைப் பாதுகாப்பதிலும், சட்டம், ஒழுங்கு இவற்றை நிலைநாட்டுவதிலும் நாட்டங்கொண்டு அக்கறை கொண்டுள்ளது. அதே நேரத்தில் எந்த ஒரு வகுப்பு மக்களின் உணர்ச்சிகளைப் புண்படுத்தும்படியான தூண்டும்படியான சொற்களைப்பற்றிக் கவலைக் கொண்டு, மூர்க்கத்தமான செயல்களை நடைபெறாமல் பார்த்துக்கொள்ள வேண்டிய கடமைக்கு ஆளாக்கப்பட்டிருக்கிறது. எந்த ஒரு அரசும் அமைதியையும், பாதுகாப்பையும் கட்டிக்காப்பது அவசியம், அப்படி அமைதிக்கும், பாதுகாப்பிற்கும் எந்த ஒரு வடிவிலோ பங்கம் ஏற்பட்டு ஆபத்து விளையுமேயானால் அந்த அரசு நீதித்துறையை நாட வேண்டியுள்ளது.

உயர்நீதிமன்றத் தீர்ப்பு தவறல்ல

எங்கள் முன்னால் உள்ள அந்த மேன்முறையீட்டு வழக்கை, சட்ட ரீதியாகவும் பார்க்கின்ற நேரத்தில் உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பு தவறானது அல்ல. பல்வேறு உயர்நீதிமன்றங்கள் இது சம்பந்தப்பட்ட பிரச்னையைப் பல்வேறு விதங்களில் முடிவு செய்து தீர்ப்பளித்துள்ளது. தனிப்பட்ட ஒரு மனிதன் மீது கடுமையான நடவடிக்கை, அல்லது தடை சட்டத்தின் மூலம் கொண்டுவரப்படுமேயானால், அதனால் எற்படும் குற்ற விளைவுகளை எதிர்நோக்க வேண்டியுள்ளது.

எனவே, குற்றவியல் நடைமுறைச் சட்டப் பிரிவு 99 ஏ ஏற்படுத்திய அறிஞர்கள், அரசிற்கு முன்னேற்பாடான அதிகாரங்களை வழங்கி உள்ளார்கள், சட்ட ரீதியாகச் சொல்லப்பட்ட வழிமுறைகளுக்கு உட்பட்டுத்தான் பயன்படுத்த வேண்டும். இந்தியக் குடிமக்களின் இரு சாராரிடையே பகைமையை வளர்க்கும், அல்லது ஒரு மதத்தினரின் உணர்ச்சியைப் புண்படுத்தும் வெளியீடுகள் இருக்குமேயானால், சட்ட ரீதியாக அரசு இதனை உன்னிப்பாகக் கவனித்து நடவடிக்கை எடுக்க சட்டத்திற்கு உட்பட்டு செயல்பட இந்தப் பிரிவு நிர்ப்பந்திப்பதும் அல்லாமல் 99 ஏ எந்தக் காரணத்திற்காகப் பறிமுதல் செய்யப்படுகிறது என்பதனையும் விளக்க வேண்டுமென உரைக்கிறது. எந்தக் காரணத்திற்காக அரசு செயல்பட்டிருக்கிறது என்பதனை கண்டிப்பாக விளக்கப்பட வேண்டுமென சட்டம் நிர்ப்பந்திப்பதால், காரணத்தை விளக்காமல், அரசு அறிவிப்பாணையில் சொல்லப்பட்டிருக்கிறது என்று சொல்வது கூடாது.

சட்ட ரீதியாக ஒரு பிரச்சனை கட்டாயமாக்கப்படுமேயானால், நிர்பந்திக்கப்படுமேயானால், அதன் பிரகாரம் அரசு செயல்பட்டே தீரவேண்டும், சட்டரீதியாக ஒரு வெளியீட்டை ஒரு மாநில அரசு பறிமுதல் செய்ய உத்தரவு பிறப்பிக்குமேயானால், அது ஒரு சாதாரண பிரச்சனை அல்ல. மிகவும் கவனாமாகச் செயல்பட வேண்டுமென்பதனை மாநில அரசு கருத்தில் கொள்ள வேண்டும்.

பிரச்னைகள் விடுபட்டால் சட்டம் செயலிழந்துவிடும்

இதுபோல பிரச்னைகளில் ஏதாவது ஒன்று விடுபடுமேயானால், சட்டம் அங்கு செயலிழந்துவிடுகிறது.

மன்னர் ஆட்சியிலிருந்து மக்களாட்சிக்கு நாம் திரும்பி வருகிறபோது, மக்களின் உரிமைகளை உன்னிப்பாகக் கவனிப்தோடு, பாதுகாக்கப்படுவதும் முறையானதாகும் சட்ட ரீதியாக இப்படித்தான் செய்லபட வேண்டும் என்று நிர்ப்பந்திக்கப்படும்போது, அப்படிச் செய்யாமல் செயல்பட்டுவிட்டு விளக்கங்கள் கூறுவது தகுதியானதும் முறையானதும் அல்ல. குற்றவியல் நடைமுறைச் சட்டப் பிரிவு 99 சி படி பாதிக்கப்பட்டவர்கள் உயர்நீதிமன்றத்தில் மேன் முறையீடு செய்து தடை உத்தரவைத் தகர்க்க மனு கொடுக்கும் நேரத்தில், அரசு எந்தக் காரணத்திற்காக செயல்பட்டிருக்கிறது என்பதனைக் கருத்தில் கொண்டு தீர்ப்பளித்தல் முறையானதாகும்.
நீதிமன்றம் அரசு அறிவிப்பாணையில் உள்ள கருத்துகளைக் கொண்டு கவனித்து, தனது எல்லைக்கு அப்பாற்பட்டு விளக்கமான விசாரணை செய்ய இயலாது, சட்ட ரீதியாகச் சில சலுகைகள் தனிப்பட்ட ஒருவருக்குக் கொடுப்பதற்குச் சட்டம் குறிப்பிட்ட அளவு இடமளிக்குமேயானால் அதனைத் தடை செய்ய, வெளியீட்டை தடை செய்ய அதிகாரம் யாருக்குமில்லை.
நாங்கள், தடைசெய்யப்படுபவரின் கருத்தை விரிவாக எடுத்துரைத்து செயல்பட வேண்டுமெனச் சொல்ல வரவில்லை. சில வழக்குகளில் குறிப்பாகச் சொல்லப்படுமேயானால், அதுவே போதுமானது. மற்ற வழக்குகளில் விரிவான விளக்கம் தேவைப்படுகிறது. சொல்லப்படாமல், விடப்படுமேயானால் அந்த ஆணை முறையானது அல்ல.

தனி மனித உரிமை பறிக்கப்படக் கூடாது

தனி மனிதனுக்குக் கொடுக்கப்பட்டுள்ள உரிமை பறிக்கப்படுவதற்கு குற்றவியல் நடைமுறைச் சட்டம் பிரிவு 99 ஏ-யைப் பயன்படுத்துவது சரியானது அல்ல. தேச நலனைப் பாதுகாப்பதற்குத் தனி மனித உரிமை கட்டுப்படுத்த வேண்டுமென்பதில் அய்யமில்லை.

தனி மனித சுதந்திரத்தைப்பற்றி கோட்பாடுகள், அரசியலமைப்பில் குறிக்கப்படும்போது காரணம் பொருந்திய கட்டுப்பாடுகளை விதித்துத் தானிருக்கிறார்கள்.

குற்றமுறை பிரிவு 99 ஏ ஏற்படுத்தப்படும்போது அரசியலமைப்பை கருத்தில் கொண்டுதான் செய்யப்பட்டிருக்கிறது. பொதுமக்களின் நன்மையினை கருத்தில் கொண்டு, பொதுமக்களின் அமைதியைக் காப்பதற்காக புது ஆணை பிறப்பிக்கப்படும்போது தனி மனித உரிமைபற்றிக் கவலைகொள்ளாமல் மூடத்தனமான கொள்கைகள் தடை செய்யப்பட வேண்டும். அந்த மாதிரியான வெளியீடுகள் சமுதாயத்தில் வெளியிடப்படுமேயானால், பொதுமக்களின் அமைதியையும் நன்மையையும் முன்னிட்டு தடை செய்யப்படுதல் அவசியம்.
கண்மூடித்தனமான, மூடத்தனமான கொள்கைகள் கண்டிக்கப்பட்டு பயமில்லாமல் வெளிக்காட்டப்படுமேயானால் முற்போக்கான எந்த ஒரு மாநில அரசும் முற்போக்கான பொருளாதாரக் கொள்கையையோ மேற்கண்டவாறு பயமில்லாமல் வெளிக்கொணரப்பட்ட செய்திகளையோ தடை செய்யக்கூடாது. இது தான் குற்றமுறை 99 ஏ பிரிவில் வலியுறுத்தப்பட்டிருக்கும் செய்தியாகும்.

தடை செய்வதானால் காரணகாரியத்தோடு விளக்கம் வேண்டும்

நம்முடைய அரசியல் அமைப்பு இந்த மாதிரியான பாராட்டத்தக்க கொள்கையை அடிப்படையாகக் கொண்டு எழுந்த காரணத்தினால் கடமை தவறாது, சட்ட ரீதியாக அது கவனிக்கப்பட வேண்டுமென்பதே ஆகும்.
சமுதாயத்திற்குத் தீங்கு விளைவிக்கும் எந்த வெளியீட்டையும் தடை செய்ய அதன்மூலம் பொதுமக்களின் அமைதியைக் காக்க அதிகாரம் வழங்கப்பட்டிருக்கிறது.

எனவே, குற்றமுறை 99 ஏ பிரிவின் நிர்வாகம் செயல்பட தடை செய்யப்பட வேண்டிய விஷயத்தை காரண காரியங்களோடு விளக்கப்பட வேண்டுமென்பதேயாகும். அரசின் அறிவிப்பாணை இம்முறையில் இருந்து தவறியிருக்குமேயானால் அது பிறப்பிக்கப்பட்ட ஆணையின் குற்றமேயாகும்.
முடிவாக நாங்கள் வெளியிடப்பட்டுள்ள புத்தகத்தின் தன்மைபற்றி ஆராயவில்லை. மூடத்தனத்தில் ஊறிப்போன சிலருக்கு வளர்கின்ற சில கொள்கைகள் நகைப்பிற்குள்ளாக்குவதாக இருக்கலாம்.

அம்மாதிரியான சிலர் சுவாமி விவேகானந்தரின் எங்களுடைய மதம் அடுப்பங்கரையிலும், எங்களுடைய தெய்வம் பானைகளாகவும் இருப்பதால் எந்த மதமும் என்னைத் தொடுவதற்கு அருகதையற்றதாக இருக்கிறது என்ற சொல்லும், நான் புனிதத் தன்மையுடையவனாக இருக்கிறேன் என்று பண்டித ஜவகர்லால் நேரு தன்னுடைய (Discovery of India) என்ற புத்தகத்தில் பக்கம் 339-ல் மேற்கோளாகக் காட்டப்பட்ட செய்திகளும் புண்படுத்துவதாக இருக்கிறது என்று சொல்லலாம். பொதுமக்களின் நன்மையை முன்னிட்டு சில தடைகள் விதிக்கப்படுவதால் தனி மனிதனுக்கு நெருக்கடி நேரத்தில் விதிக்கப்படும் தடைகளைப்பற்றி குறிப்பிடவில்லை. அப்படியில்லாத நேரத்தில் காலத்தில் விதிக்கப்படும் தடைகளைப் பற்றித்தான் குறிப்பிடுகிறோம். முறைகேடான வழிகளில் அதிகாரத்தைப் பயன்படுத்தக் கூடாது.

தற்போது வெளியிடப்பட்டுள்ள வெளியீட்டுப் புத்தகத்தைப்பற்றி, மாநில அரசு தடை விதிக்கவேண்டிய காரண காரியங்களை குற்றமுறை பிரிவு 99 ஏ பிரகாரம், நிர்பந்திக்கப்படுவதால் காட்டப்பட்டிருக்க வேண்டும்.

குற்றமுறை பிரிவு 99 ஏ பிரகாரம் கொடுக்கப்பட்டுள்ள அதிகாரத்தை ஒவ்வொரு மாநில அரசும் பல சந்தர்ப்பங்களில் பயன்படுத்தி இருப்பதால், அதனைப்பற்றி தெளிவான விளக்கத்தைத் தர கடமைப்பட்டிருக்கிறோம். இந்தியாவானது பல தரப்பட்ட சமுதாயத்தையும் பல தரப்பட்ட மதத் தன்மையையும், பகுத்தறிவுவாதிகளையும், கண்முடித்தனமான மூடநம்பிக்கைக் கொண்டவர்களையும் கொண்டுள்ளது. எந்த ஒரு மாநில அரசும் இதனைக் கருத்தில் கொண்டு எந்த ஒரு வெளியீட்டையும் தடை செய்யும்போது முறைகேடான வழிகளில் அதிகாரத்தைப் பயன்படுத்தாது என நம்புகிறோம்.

இந்த ஒரு நடைமுறை தடையானது நெருக்கடி பிரகடனத்திற்கு முற்பட்டதாக இருப்பதால், இந்த அரசின் மேல் முறையீட்டை தள்ளுபடி செய்கிறோம்.